திருப்பூர், நவ.16: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருப்பூர் மாவட்ட விளையாட்டு பிரிவின் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் ஆண், பெண் இருபாலருக்கும் மாவட்ட அளவிலான தடகள மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில், ஓட்டப்பந்தயம், பேட்மிட்டன், கூடைப்பந்து, கால்பந்து, டென்னிஸ், கபடி, டேபிள் டென்னிஸ், கைப்பந்து ஆகிய போட்டி நடக்கிறது. இதில், திருப்பூர் மாவட்டத்தில் அரசுத்துறை அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பள்ளிகல்வித்துறை ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம். இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்களது உயரதிகாரிகளிடம் அனுமதி கடிதம் மற்றும் அரசு பணியாளர் என்பதற்கான அலுவலக அட்டையுடன் போட்டி நடக்கும் நாளில் கலந்து கொள்ளலாம்.