×

சிகிச்சையை விட நோய்க்கான காரணம் கண்டறிய வேண்டும்

குமாரபாளையம், நவ.15: நோயை கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்வதை விட நோய் வருவதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என குமாரபாளையம் எக்ஸல் மருத்துவ கல்லூரி விழாவில் பேராசிரியர் பேசினார். குமாரபாளையம் எக்ஸல் இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரியின் முதலாமாண்டு வகுப்புகள் துவக்கவிழா நடைபெற்றது. தலைவர் நடேசன் தலைமை தாங்கி பேசினார். துணைத்தலைவர் டாக்டர் மதன்கார்த்திக் முன்னிலை வகித்தார். எக்ஸல் மருத்துவ கல்லூரி முதல்வர் கவிதா பேசுகையில், ‘இந்த உலகம் மருத்துவர்களிடம் நோய்க்கான சிகிச்சையை மட்டும் எதிர்பார்க்கவில்லை. நோய்க்கான மூலக்காரணத்தை கண்டறிந்து சொல்ல வேண்டுமென எதிர்பார்க்கிறது. எனவே, மருத்துவர்கள் இனி நோய்க்கான காரணம் என்ன, சுற்றுப்புற சூழல் எந்த நிலையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இனிமேல் இந்த நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்பதை அறிந்து சிகிச்சையினை மேற்கொள்வது அவசியம் என்றார்.
விழாவில் எக்ஸல் கல்வி குழுமங்களின் நிர்வாக இயக்குனர் சண்முகநாதன், மருந்தியல் கல்லூரி முதல்வர் மணிவண்ணன், பிசியோதெரபி கல்லூரி முதல்வர் ஐயப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

Tags :
× RELATED மாநில அளவிலான கைப்பந்து போட்டி