×

கஜா புயல் எதிரொலி அமராவதி அணையில் கண்காணிப்பு

உடுமலை, நவ.15: கஜா புயல் எதிரொலியாக உடுமலை அமராவதி அணையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 78 அடிக்கு நீர்மட்டம் உள்ளது.புயல் காரணமாக அதிக மழை பெய்து நீர்மட்டம் உயர்ந்தால் மேற்கொள்ள வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்து பொறியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். நேற்றும், இன்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் யாருக்கும் விடுமுறை அளிக்கவில்லை. அணையில் உதவி பொறியாளர்கள் 3 பேர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஷட்டர் இயக்கும் களப்பணியாளர்கள் 6 பேர், மூன்று ஷிப்ட்களில் கண்காணித்து வருகின்றனர்.மேலும் 500 மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், எந்த சூழ்நிலையையும் சமாளிக்க முடியும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : dam ,Amaravathi ,storm ,
× RELATED வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்