×

தொண்டர்கள் விரும்பும் கட்சியுடன் கூட்டணி

திருப்பூர், நவ.15: தொண்டர்கள் விரும்பும் கட்சியுடன் கூட்டணி ஏற்படும் என தமாகா மாநில தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
திருப்பூரில் தமாகா நிர்வாகி இல்ல திருமண விழாவுக்கு வந்த அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை அதிகரித்து வருகிறது. கடுமையான சட்டங்கள் மூலம் தண்டனை வழங்க வேண்டும். பன்றிக்காய்ச்சல் உட்பட பல்வேறு வகையான காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறை அனைத்து கிராமங்களிலும் மருத்துவ குழுக்களை ஏற்படுத்தி நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க அவிநாசி-அத்திக்கடவு கூட்டு குடிநீர் திட்டப்பணிகளை விரைவாக தொடங்கி சீரான குடிநீர் விநியோகிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பணம் மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. ஆகியவற்றால் தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் தேர்தல்களில் தமாகா தொண்டர்கள், பொறுப்பாளர்கள் விரும்பும் கட்சியுடன் கூட்டணி ஏற்படும். தற்போதுள்ள நிலையில் எந்த கட்சியுமே கூட்டணி இல்லாமல் வெற்றி பெற முடியாது.
இவ்வாறு வாசன் கூறினார்.


Tags : Coalition ,volunteers ,party ,
× RELATED 100க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி...