×

அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி

ஈரோடு, நவ. 15: ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழக  பள்ளிக்கல்வித்துறை மற்றும் அனைவருக்கும் இடைநில்லா பள்ளி இயக்கம்  சார்பில் அரசு பள்ளிககளில் படிக்கும் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவிகளுக்கு  தற்காப்பு கலை பயிற்சி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி நேற்று ஈரோடு  அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முதற்கட்டமாக கராத்தே பயிற்சி  அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் 9ம் வகுப்பினை சேர்ந்த 100 மாணவிகள்  பங்கேற்றனர். இப்பயிற்சியினை கராத்தேவில் தேர்ச்சி பெற்ற பெண் பயிற்றுனர்  ஒருவர் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். இந்த பயிற்சியானது வாரத்தில் 2  தினங்கள் என 2 மணி நேரமும், தொடர்ந்து 3 மாதங்கள் அளிக்கப்பட உள்ளது.



Tags : government school students ,
× RELATED உயர் படிப்புக்கு நுழைவு ேதர்வு எழுத சிறப்பு பயிற்சி துவக்கம்