×

பூட்டிய வீட்டில் அழுகிய சடலம்

காரைக்குடி, நவ.8: காரைக்குடி சூடாமணிபுரம் எம்ஜிஆர் தெருவை சேர்ந்தவர் சத்தியசீலன் (53). இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இவரது வீடு சில தினங்களாக பூட்டியே கிடந்தது.
நேற்று அவரது வீட்டிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காரைக்குடி வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சத்தியசீலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : house ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்