×

சிலை கொள்ளை வழக்கு கும்பகோணம் கோர்ட்டிற்கு மாற்றம்

வாடிப்பட்டி, அக். 18: சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில், கடந்த 13ம் தேதி வல்லப பெருமாள், சீனிவாச பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி உள்ளிட்ட நான்கு ஐம்பொன் சிலைகள் திருட்டு போனது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி நேற்று முன்தினம் விக்கிரமங்கலம் அருகே கல்யாணிபட்டி பிரிவு என்ற இடத்தில் நான்கு சிலைகளும் மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட சிலைகளை காடுபட்டி போலீசார் நேற்று வாடிப்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி சிந்துமதி, 4 ஐம்பொன் சிலைகளையும் பத்திரமாக கொண்டு சென்று கும்பகோணத்தில் செயல்படும் சிலை கடத்தல் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்கை அந்த நீதிமன்றத்திலேயே நடத்தி கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

Tags : idol ,Kumbakonam Court ,
× RELATED பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீரபாண்டி கோயிலில் இன்று தேரோட்டம்