×

பொதுமக்களுக்கு மிரட்டல் 3 வாலிபர்கள் அதிரடி கைது

புதுச்சேரி, அக். 17: புதுவை ரெட்டியார்பாளையம் அஜீஸ்நகர் 4வது குறுக்கு தெருவில் 3 வாலிபர்கள் குடிபோதையில் நின்று கொண்டு அவ்வழியே செல்லும் பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. உதவி சப்-இன்ஸ்பெக்டர் பழனி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று 3 வாலிபர்களையும் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள், தட்சிணாமூர்த்திநகரை சேர்ந்த உதயன் (33), உருளையன்பேட்டை மண்ருட்டி சாமியார்மடம் திலிப்குமார் (18), முத்திரையர்பாளையம் தணிகைவேல் (19) என்பது தெரியவந்தது. இதில் உதயன், செல்போன் சிம்கார்டு விநியோகிப்பாளராக வேலை செய்து வருகிறார். மற்ற 2 பேரும் தனியார் நிறுவன ஊழியர்கள். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...