தர்மபுரி, அக்.16: தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்கத்தின் தேர்தலுக்கான ஆயத்த பொதுக்குழு கூட்டம் நடந்தது.
தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்கத்தின் தேர்தலுக்கான ஆயத்த பொதுக்குழு கூட்டம், தர்மபுரியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் இஸ்மாயில் முன்னிலை வகித்தார். தேர்தல் வழக்கறிஞர் ஆணையாளர் செல்வகுமார் கலந்து கொண்டு பேசினார்.
இதில் துணை தேர்தல் ஆணையாளராக ராமமூர்த்தி, அபிமன்னன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத்திற்கு வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படும். மேலும், 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் பணி முடித்த ஓட்டுனர்களுக்கு, விடுபட்ட தர ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.