×

கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட கொலை வழக்கு ரவுடி கைது

புதுச்சேரி, அக். 16:  முத்தியால்பேட்டையில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட கொலை வழக்கு ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
  புதுவை, முத்தியால்பேட்டை, குபேர் பாடசாலை அருகே நேற்று முன்தினம் ஒரு  ரவுடி கத்தியுடன் நின்று கொண்டு அந்த வழியாக செல்பவர்களிடம் ரகளையில்  ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதுதொடர்பாக பொதுமக்கள் முத்தியால்பேட்டை  போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்  தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து ரகளையில் ஈடுபட்ட ரவுடியை கைது  செய்தனர்.
 விசாரணையில் அவர், முத்தியால்பேட்டை, சின்னையாபுரம்  வாஞ்சிநாதன் என்ற உலகநாதன் (33) என்பதும் ரவுடியான இவர் மீது கொலை, கொலை  முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.  இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.  இதுதவிர முத்தியால்பேட்டை மார்க்கெட் அருகே நள்ளிரவு சந்தேகத்துக்கிடமான  வகையில் சுற்றித் திரிந்த கணேஷ் நகர் மணிகண்டன் (22), சோலை நகர் மதிவாணன்  (23) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
பாரதிதாசன் கல்லூரியில் இலக்கிய விழா
புதுச்சேரி, அக். 16: புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரி ஆங்கிலத்துறை சார்பில் மறைந்த பேராசிரியர் ரமேஷ் நினைவாக இலக்கிய விழா நேற்று தொடங்கியது. துறைத்தலைவர் குமாரசாமி வரவேற்றார். கல்லூரி முதல்வர் பூங்காவனம் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார். ஆங்கிலத்துறை மாணவிகளின் கலைத்திறனை வெளிப்படுத்தும் விதமாக பட்டிமன்றம், கவிதை, சிறுகதை போட்டி, வினாடி வினா மற்றும் இலக்கிய கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. இதில் மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதுதவிர, 4 ஆங்கில இலக்கிய நாடகங்களும் 25 இலக்கிய கதாபாத்திரங்களின் அணிவகுப்பும், இலக்கிய விழாவில் இடம் பெறுகின்றன. இப்போட்டிகள் இன்றும் நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் பிந்து பாலன் செய்திருந்தார்.

Tags : Rudy ,murder ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...