×

வேடிக்கை பார்த்த போலீஸ், தேர்தல் அலுவலர்கள்

சர்க்கரை ஆலையில் தேர்தல் அறிவிப்பு, பெரும்பாலான விவசாயிகளை சென்றடையவில்லை. மேலும் ஆளுங்கட்சியினருக்கும், விவசாயிகள் கூட்டமைப்பினருக்கும் இடையே தேர்தலுக்கு முன்பே உடன்பாடு ஏற்பட்டு விட்டது. கடந்த 9ம் தேதி இரவு, வேட்பு மனுதாக்கல் செய்த பெரும்பாலான விவசாயிகள் வாபஸ் பெற்றுவிட்டனர். 20 பேர் வரை வாபஸ் பெறவேண்டியிருந்தது. இரவு 10 மணியாகி விட்டதால், கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட தேர்தல் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி அதற்கு மேல்,

மனுக்களை வாபஸ்பெற காலஅவகாசம் அளிக்காமல், இறுதிவேட்பாளர்கள் பட்டியலை ஒட்டி தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார்.  இதனால் அதிர்ச்சி அடைந்த ஆளுங்கட்சி, விவசாயிகள் கூட்டமைப்பு என இரு தரப்பினரும் நேற்று நடைபெற்ற வாக்குபதிவின் போதும் கூட்டணி அமைத்து, தேர்தல் வேலைகளில் இறங்கினர். இதற்கு போலீஸ் அதிகாரிகளும், தேர்தல் அலுவலர்களும் பாதுகாப்பாக செயல்பட்டனர்.

Tags : election officials ,
× RELATED பத்தனம்திட்டா தொகுதியில் மாமியாரின்...