×

தனியார் கம்பெனி ஊழியர் மர்ம சாவு

திருபுவனை, செப். 25: திருபுவனையில் தனியார் கம்பெனி ஊழியர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் நெல்லை மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது.திருநெல்வேலி மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கெங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (39). இவர் புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் உள்ள நைலான் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் கடந்த 6 மாதமாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் தங்கியிருந்த அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அதே தொழிற்சாலையில் வேலைபார்க்கும் அலெக்ஸ் என்பவர் சென்று பார்த்தபோது, திருப்பதி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், திருப்பதியை மீட்டு மதகடிப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர் திருப்பதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.இதுகுறித்து திருபுவனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா வழக்குப்பதிந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் திருப்பதி இறப்புக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...