புதுச்சேரி, ஆக. 15: புதுச்சேரி, காராமணிக்குப்பத்தில் அடையாளம் தெரியாத நபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். புதுவையில் இருந்து நேற்று மதியம் சென்னை நோக்கி பயணிகள் ரயில் புறப்பட்டு சென்றது. அந்த ரயில் காராமணிக்குப்பம், ஜீவானந்தம் பள்ளி பின்புறம் வந்தபோது அங்கிருந்த 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் நபர் திடீரென ரயில் முன் பாய்ந்தார். இதில் தலை, கை, கால்கள், இடுப்பு பகுதி துண்டு துண்டான நிலையில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இதுகுறித்த தகவலின்பேரில் அங்கு விரைந்து சென்ற உருளையன்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் நியூட்டன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். ரயில்வே போலீசார் சம்பவம் நடந்த பகுதியை பார்வையிட்டனர்.
இதுதொடர்பாக தென்னக ரயில்வே சூப்பிரெண்டு வெங்கடேசன் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிந்த உருளையன்பேட்டை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இடது மார்பில் உஷா என பச்சை குத்தியிருந்ததோடு, சந்தன நிற சட்ைட அணிந்திருந்த அந்த நபரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக கடலூர், விழுப்புரம் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.