×

வயது வரம்பை தளர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, ஆக. 15: புதுச்சேரியில் புதிதாக தேர்வு செய்யவுள்ள காவலர், ஆசிரியர், ஓவியர் பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க சட்டமன்றத்தில் ஒப்புதல் அளித்தபடி வயது வரம்பில் தளர்வு அளிக்கக்கோரி மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் தலைமை தபால் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. எமிலன் தலைமை தாங்கினார். முருகன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி, கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாறன், திக சிவ.வீரமணி, விசிசி.நாகராஜன், பார்ப்பனிய பயங்கரவாத எதிர்ப்பு கூட்டியக்கம் மங்கையர்செல்வம், பெரியார் சிந்தனையாளர் இயக்கம் தீனா, ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் இயக்கம் அறிவுமணி, போராளிகள் இயக்கம் சுந்தர், இந்திய இளைஞர் முன்னணி கலைபிரியன், இந்திய புரட்சியாளர் இயக்கம் டேவிட் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மணிவண்ணன் நன்றி கூறினார். தொடர்ந்து, கூட்டமைப்பு நிர்வாகிகள், சட்டசபையில் முதல்வரை சந்தித்து பேசினர். அவர் அறிவுறுத்தலின்பேரில் டிஜிபி, டிஐஜியை சந்தித்து பேச உள்ளனர். இதிலும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...