×

கலைஞருக்கு மவுன அஞ்சலி

சென்னை: திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னை வடக்கு மாவட்டம், திருவொற்றியூர் மேற்கு பகுதி திமுக சார்பில், திருவொற்றியூரில் நேற்று மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. பகுதி செயலாளர் கே.பி.சங்கர் தலைமை தாங்கினார். கேபிபி.சாமி எம்எல்ஏ, நிர்வாகிகள் ராமநாதன், நாகலிங்கம், தமிழரசன், சொக்கலிங்கம், மதன்குமார். மகளிரணி கஸ்தூரி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் விம்கோ நகரில் இருந்து அஜாக்ஸ் பஸ் நிலையம் வரை மவுன ஊர்வலம் சென்றனர். பின்னர், அங்கு வைக்கப்பட்டு இருந்த கருணாநிதி திருவுருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மின்வாரிய தொமுசா சார்பில் கருணாநிதி மறைவையொட்டி அவரது திருவுருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, காலடிப்பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் நேற்று நடந்தது. திட்ட செயலாளர் சசிகுமார் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் ரத்தின சபாபதி, நிர்வாகிகள் சின்னய்யா, பாரி, மின்வாரிய அதிகாரிகள், பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பாரிமுனை ஜார்ஜ்டவுன் குற்றவியல் நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்ற வளாகத்தில், கருணாநிதி திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினர். வழக்கறிஞர் மருதுகணேஷ் தலைமை வகித்தார். இதில், வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பொம்முராஜ், திமுக முன்னாள் கவுன்சிலர் போஸ், மதியழகன், ரூபசங்கர், யாசர் அராபத், ரஜினிகாந்த் உட்பட 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Tags :
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...