×

மாவட்ட அளவிலான திருக்குறள் போட்டி

ஈரோடு: ஈரோட்டில் மாவட்ட அளவிலான திருக்குறள் பேச்சுப்போட்டி மற்றும் ஓவிய போட்டிகள் நடந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். மாணவ சமுதாயத்தினரிடையே திருக்குறளின் கருத்துகளை பரப்பவும், தமிழாற்றலை வளர்க்கும் வகையிலும் ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில் ஸ்ரீராம் இலக்கிய கழகத்தின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான திருக்குறள் பேச்சுப்போட்டி மற்றும் ஓவிய போட்டிகள் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மண்டல மேலாளர் பாஸ்கர் வரவேற்புரையாற்றினார். ஜவுளி மற்றும் ஆடைகள் சங்க செயலாளர் சிவானந்தன் முன்னிலை வகித்தார். வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் மற்றும் தாளாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார்.

இடைநிலை பிரிவில் 6,7,8 ஆகிய வகுப்புகளுக்கும், மேல்நிலைப் பிரிவில் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு ஆகிய பிரிவுகளுக்கும், கல்லூரி பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு, பொறியியல், மருத்துவம், பாலிடெக்னிக் ஆகிய பிரிவு மாணவ, மாணவியர்களுக்கும் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு ஈரோடு டவுன் டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன், ஈரோடு அறக்கட்டளை மருத்துவமனையின் மூளை நரம்பியில் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் செல்வபெருமாள் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். முடிவில் கிளை மேலாளர் சின்னதுரை நன்றி கூறினார். இந்த போட்டிகளில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...