×

தர்மபுரி பண்ணையில் பயங்கர தீ 3,200 கோழிகள் கருகி சாவு

தர்மபுரி, ஆக.14: தர்மபுரியில் கோழி பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டு 3,200 கோழிகள் உயிரிழந்தது. தர்மபுரி மாவட்டம் ஏ.பள்ளிப்பட்டி முக்காரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம்(39). இவர் சொந்தமாக கோழிப்பண்ணை வைத்துள்ளார். நேற்று முன்தினம், கோழிப்பண்ணையில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த செல்வம், உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார். ஆனால் தீ மளமளவென பரவியது. பின்னர், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடம் வந்த தீயணைப்பு துறை வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் கோழிப்பண்ணையில் இருந்த 3,200 கோழிகள் கருகி இறந்தன. இதன் மதிப்பு ரூ2லட்சம் ஆகும். மின்கசிவால் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா