×

சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடிகள் விற்பனை ஜோர்

தர்மபுரி, ஆக.13: சுதந்திர தினத்தையொட்டி, தர்மபுரி நகர கடைகளில் தேசிய கொடிகள் விற்பனை ஜோராக நடக்கிறது. நாடு முழுவதும் வரும் 15ம் தேதி, சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தர்மபுரி நகரில் பஸ் நிலையம் அருகே முகமதுஅலி கிளப் ரோடு, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பேன்சி மற்றும் புத்தக கடைகளில், கொடி விற்பனை ஜோராக நடந்து வருகிறது.

இங்கு சட்டையில் குத்திக் கொள்ளும் மெட்டல் பேட்ஜ் ரூ. 4 முதல் ரூ. 8 வரையும், பிளாஸ்டிக் மூவர்ண தொப்பி ரூ. 20, பிளாஸ்டிக் கொடிகள் ரூ. 2 முதல் ரூ. 5 வரையும், துணிக்கொடிகள் ரூ. 50 முதல் ரூ. 100 வரையும் கையில் அணியும் பேண்டுகள் ரூ5, ரூ, 10க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா