×

அம்பையில் பூப்பந்தாட்ட போட்டி பரிசளிப்பு விழா

அம்பை, ஆக. 13:அம்பையில்  தீர்த்தபதி பூப்பந்தாட்ட கழகம் சார்பில் பூப்பந்தாட்ட போட்டி  2 நாட்கள் நடந்தது. இதில் தூத்துக்குடி ஐஐபிஎம்எஸ் பூப்பந்தாட்ட அணி எட்டயபுரம்  பாரதி பூப்பந்தாட்ட  அணி, மேலப்பாளையம் எம்ஆர்சிஏ அணி, வாசுதேவநல்லூர்  ரமணா பூப்பந்தாட்ட  அணி என நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களைச்  சேர்ந்த 23 அணிகள் பங்கேற்றன. இதில் வெற்றிபெற்ற அணியினருக்கு பரிசுகள் வழங்கும்  விழா நடந்தது. தலைமை வகித்த கல்லூரி முதல்வர் சுடலையாண்டி, அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த  தூத்துக்குடி ஐஐபிஎம்எஸ் பூப்பந்தாட்ட கழக அணிக்கு பண்ணை சங்கரய்யர்  நினைவு சுழல் கோப்பையையும் பிற அணிகளுக்கு பரிசுகளும் வழங்கினார். தீர்த்தபதி பூப்பந்தாட்ட கழகத் தலைவர் அண்ணாமலை முன்னிலை  வகித்தார். செயலர் பண்ணை சந்திரசேகரன் வரவேற்றார். இதில் டாக்டர்  ஆனந்தஜோதி, வர்த்தக சங்கச் செயலாளர் கார்த்திகேயன், அரிமா சங்க நிர்வாகி சிவராமன், கிருஷ்ணன், ராமமூர்த்தி உள்ளிட்ட பலர்  பங்கேற்றனர். வில்சன் தனசிங் நன்றி கூறினார்.


Tags :
× RELATED குண்டாசில் இருவர் கைது