×

நெல்லை அருகே கல்லூரி மாணவர் மாணவி தற்கொலை

நாங்குநேரி,  ஆக. 13:  மூன்றடைப்பு அருகே பனையன்குளத்தைச் சேர்ந்த மகாலிங்கம் மகன்  ரத்தினகுமார் (20). பாலிடெக்னிக் கல்லூரி மாணவரான இவரை சரியாக படிக்கவில்லை என்று கூறி பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ரத்தினகுமார்,  கடந்த 10ம் தேதி செங்குளம் ரயில் நிலையம் அருகே ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். நாகர்கோவில் ரயில்வே போலீசார் உடலை பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள் இறுதிச்சடங்கு நடத்தி தகனம் செய்தனர்.

இதேபோல் தெய்வநாயகப்பேரியை சேர்ந்த வெள்ளப்பாண்டி மகள் சுபா. நெல்லையிலுள்ள ஒரு அரசு மகளிர் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட சுபா நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மூலக்கரைப்பட்டி எஸ்ஐ  ஜமால் மற்றும் போலீசார், உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதனிடையே  சுதாவின் தந்தை வெள்ளப்பாண்டி போலீசில் அளித்துள்ள புகாரில், வயிற்றுவலி காரணமாக  சுதா பூச்சி மருந்தை குடித்ததாகத் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து  விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.





Tags :
× RELATED குண்டாசில் இருவர் கைது