×

அண்ணாமலையார் கோயில் ஆடிப்பூர பிரமோற்சவம் பராசக்தியம்மன் மாடவீதியில் உலா

திருவண்ணாமலை, ஆக.9: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ஆடிப்பூர பிரமோற்சவத்தின் 5ம் நாளான நேற்று பராசக்தியம்மன் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 4ம் தேதி ஆடிப்பூர பிரமோற்சவ உற்சவம் ெகாடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெற உள்ளது. விழாவையொட்டி தினமும் பகல், இரவு வேளைகளில் விநாயகர், பராசக்தியம்மன் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

இவ்விழாவின் 5ம் நாளான நேற்று விநாயகர், பராசக்தியம்மன் மேளதாளம் முழங்க மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவின் 10ம் நாளான வருகிற 13ம் தேதி காலை சிவகங்கை தீர்த்தகுளத்தில் தீர்த்தவாரியும், அன்று மாலை 5 மணியளவில் பெரிய நந்தி அருகே உள்ள வளைகாப்பு மண்டபத்தில் பராசக்தியம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும், அன்று நள்ளிரவு 12 மணியளவில் பராசக்தி அம்மன் சன்னதி முன் தீமிதிவிழாவும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ஞானசேகர் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


Tags :
× RELATED வேன் தலைகீழாக கவிழ்ந்து 10 பேர் காயம் சேத்துப்பட்டு மாதாமலையில்