ஈரோடு, ஆக. 7: தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் உரிமைகள், சலுகைகள் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் வருகின்ற 9ம் தேதி ஈரோடு லீ ஜார்டின் ஓட்டலில் நடைபெற உள்ளது. தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) ஐதராபாத் மண்டல அலுவலகம் சார்பில், நடைபெற உள்ள இக்கூட்டத்தில் அனைத்து செல்போன் நிறுவன வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று டிராய் முதன்மை ஆராய்ச்சி அலுவலர் மூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.