×

அரிசி கடை சூறை 6 பேர் மீது வழக்கு

புதுச்சேரி,  ஜூன் 21: முத்தியால்பேட்டை ஏழை மாரியம்மன் கோயில் தெருவில்  ராகவன் (80) என்பவர் அரிசி  கடை நடத்தி வருகிறார். இவரது மகனுடன் வீட்டு  வாடகை பிரச்னை தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஒரு கும்பல் பயங்கர  ஆயுதங்களுடன் அரிசி கடைக்கு வந்து தாக்குதல் நடத்தியதாம்.இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசில் புகார் அளித்தும் வழக்கு  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. பின்னர் இதுபற்றி போலீஸ் தொடர்பான புகார் நலக்குழுவில் முறையிட்டார். இதுபற்றி   விசாரிக்க அதிகாரிகள் உத்தரவிட்ட நிலையில் சூர்யா, முத்து, சபரி, பிரகாஷ், வெங்கடேசன்,  திருநாவுக்கரசு உள்ளிட்ட கும்பல் மீது முத்தியால்பேட்டை  போலீசார் வழக்குபதிந்து தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...