சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது ஒ.பன்னீர் செல்வம் பேசுகையில் ‘‘கொரோனா காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு உணவு மற்றும் அறை வழங்கிய ஹோட்டல் நிறுவனங்களுக்கு பில் தொகை நிலுவையில் உள்ளதாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில் ‘‘கொரோனா காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நியாயமான முறையில் தங்கும் அறை, உணவு ஆகியவற்றை நியாயமான விலையில் வழங்கிய ஹோட்டல் நிறுவனங்களுக்கு பில் தொகை செட்டில் செய்யப்பட்டுள்ளது.
ஹோட்டலே இல்லாமல் உணவு வழங்கியதாக கூறிய பில் தொகை நிலுவையில் உள்ளது. எனினும் உண்மையாகவே தரமான உணவு வழங்கப்பட்டதா என அது குறித்து ஆய்வு செய்யப்பட்டு உண்மையானவர்களுக்கு நிலுவை தொகை வழங்கப்படும்” என்றார்.