×

சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது

வேளச்சேரி:  வேளச்சேரி, தேவி கருமாரியம்மன் நகர் பிரதான சாலையில் உள்ள கடையில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக, வேளச்சேரி போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து, நேற்று போலீசார் மாறுவேடத்தில்  அங்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த 11 பேர், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிந்தது. போலீசார் அவர்களை மடக்கி பிடித்து, அவர்களிடமிருந்து சூதாடுவதற்காக வைத்திருந்த ரூ.2500 ரொக்கம் மற்றும் 8 சீட்டு கட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.    பின்னர், அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், வேளச்சேரியை சேர்ந்த அன்பு (50), சுதாகர் (33) ஆகியோர் முக்கிய குற்றவாளிகள் என தெரிய வந்தது. இதையடுத்து, 11 பேரையும் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி  வருகின்றனர்.




Tags : 11 people involved in gambling arrested
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி