×

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே 12 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ வழக்கில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரதாப் (23), டிரைவர். இவர், சரிவர வேலைக்கு செல்லாமல் நண்பர்களோடு சுற்றி திரிந்து வந்துள்ளார். இந்நிலையில், இவர் அதே பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமியிடம் யதார்த்தமாக பழகி வந்துள்ளார். அந்த சிறுமியும் அண்ணன் என்ற முறையில் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பிறகு, தொடர்ந்து அந்த சிறுமியை மிரட்டி அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

பின்னர், பிரதாப் வீட்டுக்கு அடிக்கடி சிறுமி சென்று வருவதும், சிறுமி சரிவர சாப்பிடாமல் எப்போதும் சோகமாகவே இருந்து வந்ததை சிறுமியின் பெற்றோர் கண்டு சந்தேகமடைந்தனர்.  சிறுமியிடம் என்ன பிரச்னை ஏன் சோகமாக இருக்கிறாய் என கேட்டதும் நடந்த விவரத்தை  பெற்றோரிடம் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பிரதாப் மீது புகார் அளித்தனர். இதனையடுத்து,  பிரதாப்பை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், சிறுமியை கர்ப்பமாக்கியதை பிரதாப் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, மகளிர் போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அங்குள்ள சிறையில் நேற்று அடைத்தனர்.

Tags : Bokso , Boy arrested in Bokso for impregnating girl
× RELATED மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த...