×

82 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு

சென்னை:  தமிழகத்தில் 82 லட்சம் பேர் தங்களுடைய மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளனர் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 28ம் தேதி தமிழகம் முழுவதும் இதற்காக 2,811 சிறப்பு முகாம்கள் திறக்கப்பட்டன. ஆன்லைன் மூலமாகவும் ஆதாரை இணைத்துக்கொள்வதற்கான வலைதளங்களும் செயல்பாட்டுக்கு வந்தன. மேலும், மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க அந்தந்த மின் கட்டண அலுவலகங்களில் விழிப்புணர்வு பாதாகைகள் வைக்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் மின் இணைப்பு பெற்றுள்ள 2.37 கோடி மின்நுகர்வோரில் நேற்று மட்டும் 2,811 பிரிவு அலுவல சிறப்பு முகாம்கள் மூலம் 2.92 லட்சம் இணைப்புகளும், ஆன்லைனில் 1.51 லட்சம் இணைப்புகளும் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. நேற்று வரை மொத்தம் 81.73 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

Tags : Aadhaar , 82 lakh people Aadhaar link with electricity connection
× RELATED பஸ்சில் இலவசமாக பயணித்த வாக்காளர்கள்