×

கிராம சபை கூட்டங்களில் ஆன்லைன் சூதாட்ட தடை தீர்மானம் நிறைவேற்ற அன்புமணி வேண்டுகோள்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி டிவிட்டரில் கூறியுள்ளதாவது: இந்திய விடுதலை நாளான ஆகஸ்ட் 15ம் தேதி கிராம சபைக் கூட்டங்களை நடத்தும்படி தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. தமிழ்நாட்டை இன்று பீடித்துள்ள இரு பெருங்கேடுகள் ஆன்லைன் சூதாட்டமும், மதுக்கடைகளும் தான். ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த ஓராண்டில் மட்டும் 28 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மது அரக்கன் ஆண்டுக்கு 2 லட்சம் உயிர்களை பலி கொள்கிறான்.

இரு சமூகக் கேடுகளையும் ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஓங்கி ஒலித்தாலும், அவற்றின் தீமைகளை ஆட்சியாளர்களே ஒப்புகொண்டாலும் கூட,  ஆன்லைன் சூதாட்டத்தையும், மதுவையும்  தடை செய்வது தொடுவானத்தைப் போல நீண்டு கொண்டே தான்  செல்கிறது. மக்களின் உணர்வுகளை அரசிடம் உரக்க சொல்லும் வகையில் வரும் 15ம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் ஆன்லைன் சூதாட்ட தடை, மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்காக கிராமசபை கூட்டங்களில் பாமகவினர் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்.

Tags : Anbumani ,Gram Sabha , Anbumani appeals to pass a resolution banning online gambling in Gram Sabha meetings
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...