×

கொரோனா 2ம் அலை எதிரொலி: மகாராஷ்டிராவில் நாளை இரவு முதல் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்...அம்மாநில முதல்வர் உத்தவ் அறிவிப்பு.!!!

மும்பை: கொரோனா தொற்று அதிகரிப்பதால் மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளை முதல் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா 2வது அலை தீவிரமாகி உள்ளது. நாட்டிலேயே அதிகமாக மகாராஷ்டிராவில் வைரஸ் தொற்று தீயாய் பரவி வருகிறது. இதனால் அங்கு இரவு ஊரடங்கு, வார இறுதி நாட்கள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. விரைவில் 14 நாள் முழு ஊரடங்கு விதிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின்றன. இதனால், மகாராஷ்டிராவில் இருந்து தினமும் குடும்பம் குடும்பமாக வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு பயணித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, நாங்கள் தொடர்ந்து எங்கள் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துகிறோம், ஆனால் அவை அழுத்தத்தில் உள்ளன. மருத்துவ ஆக்ஸிஜன், படுக்கைகள் பற்றாக்குறை உள்ளது, மேலும் ரெம்டெசிவிர் தேவை அதிகரித்துள்ளது. அருகிலுள்ள மாநிலங்களிலிருந்து மருத்துவ பயன்பாட்டிற்காக ஆக்ஸிஜன் வழங்குவதில் எங்களுக்கு ஐ.ஏ.எஃப் உதவி வழங்குமாறு பிரதமரிடம் கேட்டுக்கொள்வேன் என்றார்.

மேலும், கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் முழு ஊரடங்குக்கு இணையான கடும் கட்டுப்பாடுகளுடன் நாளை இரவு 8 மணி முதல் மே 1-ம் தேதி வரை 15 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. 144 தடை அமலில் உள்ள நாட்களில் தேவையற்ற பயணங்கள் மேற்கொள்வதை மக்கள் தவிக்க வேண்டும். மிக அவசிய தேவைகளுக்கு மட்டுமே பொது போக்குவரத்தை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது.

அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே உள்ளூர் ரயில் மற்றும் பஸ் சேவைகள், பெட்ரோல் பம்புகள், SEBI தொடர்புடைய நிதி நிறுவனங்கள் செயல்படும். கட்டுமானப் பணிகள் தொடரும். ஹோட்டல் / உணவகங்கள் மூடப்படாமல் இருக்க, பார்சல் மற்றும் வீட்டு விநியோகங்கள் அனுமதிக்கப்படுகின்றன. சினிமா அரங்குகள், தியேட்டர்கள், ஆடிட்டோரியங்கள், கேளிக்கை பூங்காக்கள், ஜிம்கள், விளையாட்டு வளாகங்கள் மூடப்பட உள்ளன. படங்கள், சீரியல், விளம்பரங்கள் மூடப்பட உள்ளன. அத்தியாவசிய சேவைகளைச் செய்யாத அனைத்து கடைகள், மால்கள், ஷாப்பிங் மையங்களும் இரவு 8 மணி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி காலை 7 மணி வரை, மே 1 ஆம் தேதி வரை மூடப்படும் என்று தெரிவித்தார்.


Tags : Corona ,Maharashtra ,Chief Minister ,Uttam , Corona 2nd wave echo: 144 restraining orders to be enforced in Maharashtra for 15 days from tomorrow night ... State Chief Minister Uttam's announcement !!!
× RELATED பேருந்தும், லாரியும் மோதி விபத்து: 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!