×

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!! வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் பெய்யக்கூடிய ஆண்டு மழைப்பொழிவில் அதிகளவிலான மழை வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் கிடைக்கிறது. அந்தவகையில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தமிழகத்தில் தொடங்கியதாக வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ய தொடங்கி இருக்கிறது.

அதிலும் குறிப்பாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் நேற்று முன்தினமும், நேற்றும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதுதொடர்பாக கூறியிருப்பதாவது;  வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் விட்டு விட்டு மழை தொடரும். அவ்வப்போது ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் 11 செ.மீ., ராமேஸ்வரம் தலா 10 செ.மீ., அம்பத்தூர், பாம்பன் தலா 9 செ.மீ., ஆலந்தூர், சோழிங்கநல்லூர் தலா 8 செ.மீ., எண்ணூர், இந்துஸ்தான் பல்கலைக்கழகம், முதுகுளத்தூர், மண்டபம் தலா 7 செ.மீ., சென்னை விமானநிலையம், சத்யபாமா பல்கலைக்கழகம் பெரம்பூர், ஆர்.எஸ்.மங்களம், கமுதி தலா 6 செ.மீ., சோழவரம், சுரலக்கோடு, கோவிலங்குளம், பூண்டி, கடலாடி, எம்.ஜி.ஆர்.நகர், பரமக்குடி, கும்மிடிப்பூண்டி தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Tags : districts ,Tamil Nadu , Chance of heavy rain in 6 districts in Tamil Nadu in next 24 hours .. !! Meteorological Center Information
× RELATED தமிழ்நாட்டில் நேற்று 16 மாவட்டங்களில்...