சென்னை: நாளை காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்படுவதை ஒட்டி காவலர் நினைவு கல்வெட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சென்னையில் காவல் இயக்குனர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 1962 ஆண்டு முதல் தற்போது வரை காவல்துறையில் பணியின்போது உயிரிழந்த 151 பேரின் உருவம் பொறிக்கப்பட்ட நினைவு கல்வெட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.