சென்னை: தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக ஐகோர்ட்டில் டிஜிபி தகவல் தெரிவித்துள்ளார். மேலும், ரவுடிகளால் போலீஸ் தாக்கப்படுவது வருத்தம் அளிக்கிறது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சட்டமன்றத்தில் எப்போது மசோதா தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.