குன்றத்தூர்: குன்றத்தூர் பகுதியில் சம்சுதீன் (40) என்பவரது கடையில் சட்ட விரோதமாக குட்கா விற்பதாக குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், அந்த கடையில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு குட்கா பொருட்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்தது தெரிந்தது. தொடர்ந்து சம்சுதினை கைது செய்த தீவிரமாக விசாரித்தனர். அதில், குரோம்பேட்டையை சேர்ந்த சுப்பையா (52). குட்காவை மொத்தமாக வாங்கி, அதனை சம்சுதீன் போன்ற சிறு வியாபாரிகளுக்கு சப்ளை செய்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், சுப்பையாவை கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்து சுமார் 200 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார், கைது செய்த 2 பேரையும், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்த குட்கா மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் என கூறப்படுகிறது.