சென்னை: குட்கா ஊழல் வழக்கில் பொதுநலனை காப்பாற்றும் வகையில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். குட்கா ஊழல் தொடர்பான விசாரணைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. குட்கா விற்பனையை தாராளமாக அனுமதித்ததை அம்பலப்படுத்த பேரவையில் பொட்டலங்களை காட்டினோம் என அவர் கூறியுள்ளார்.