சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 5,569 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 5,36,477 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சை பலனின்றி சென்னையில் 3,406 பேரும், தமிழகத்தில் இதுவரை 8,751 பேரும் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக தமிழக சுகாராத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 85,117 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 5,569 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 36 ஆயிரத்து 477 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 3,351 பேர் ஆண்கள், 2,218 பேர் பெண்கள் என தற்போது வரை 3 லட்சத்து 23 ஆயிரத்து 290 ஆண்கள், 2 லட்சத்து 13 ஆயிரத்து 157 பேர் பெண்கள், 30 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 5,556 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 4 லட்சத்து 81 ஆயிரத்து 273 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 46 ஆயிரத்து 453 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 66 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் 30 பேரும், அரசு மருத்துவமனையில் 36 பேரும் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் 8 பேர், அரியலூர் 1, செங்கல்பட்டு 5, கோவை 4, கடலூர் 2, கள்ளக்குறச்சி 1, காஞ்சிபுரம் 4, கரூர் 1, நாகப்பட்டிணம் 3, நாமக்கல் 2, நீலகிரி 1, ராமநாதபுரம் 1, ராணிப்பேட்டை 3, சேலம் 6, தஞ்சாவூர் 2, தேனி 3, திருப்பத்தூர் 2, திருவள்ளூர் 3, திருவண்ணாமலை 3, நெல்லை 2, திருப்பூர் 1, திருச்சி 2, வேலூர் 4, விழுப்புரம் 2 என 66 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,751 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.