சென்னை: தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் 150 அடி உயர பிரமாண்ட கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் நேற்று மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று தேசிய கொடி ஏற்றி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது: சத்தியமூர்த்தி பவனில் அமைக்கப்பட்டுள்ள 150 அடி கொடி கம்பத்தை ராயபுரம் மனோ, திரவியம் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்தார்கள். அவர்களுக்கு என்னுடைய நன்றி. செல்வந்தர்கள், கொள்கை மறந்தவர்கள் வந்த போது இந்திரா காந்தி அன்று காளியாக அவதாரம் எடுத்து காங்கிரசை தூய்மை செய்தார். அதேபோல, ராகுல் காந்தி அவதாரமாக வந்து இருக்கிறார். அதற்கு முதல் உதாரணம், ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த நிகழ்வுதான்.இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, டாக்டர் செல்லக்குமார் எம்பி, பொருளாளர் நாசே ராமச்சந்திரன், மகிளா காங்கிரஸ் தலைவர் வக்கீல் சுதா, கோபண்ணா, சீரஞ்சிவி, ஊர்வசி அமிர்தராஜ், பொன்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், அரும்பாக்கம் க.வீரபாண்டியன், முன்னாள் மாவட்ட தலைவர் ரங்கபாஷ்யம், நாஞ்சில் பிரசாத், எம்.பி.ரஞ்சன்குமார், சுமதி அன்பரசு, அஸ்வர்தாமன், மயிலை தரணி, காண்டீபன், எம்எம்டிஏ கே.கோபி, எம்.ஆர்.ஏழுமலை, ராகுல்காந்தி, நவீன், ைஹஜாக் கனி, டில்லி பாபு உள்பட பலர் பங்கேற்றனர்.