திருச்சி: திருச்சியில் 2 வாரம் முழு ஊரடங்கை அமல்படுத்த கோரிய வழக்கில் மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ராஜகோபால் தொடர்ந்த வழக்கில் மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணையின் போது திருச்சி மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் காணொளியில் ஆஜராக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.