×

ஆவடி நாசர் மனைவிக்கு கொரோனா தொற்று: தனியார் மருத்துவமனையில் அனுமதி

ஆவடி: திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவடி சா.மு.நாசர் கடந்த 4 மாதங்களாக மாவட்டத்திற்கு உட்பட்ட ஆவடி, பூந்தமல்லி, திருவள்ளூர் ஆகிய தொகுதிகளில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை தொடர்ந்து வழங்கி வந்தார். இந்நிலையில், கடந்த 3ம் தேதி நாசர் காய்ச்சலால் அவதிப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு  கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர் வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையில், நாசர் மனைவி பாத்திமா கனியும், அவரது வீடு அமைந்துள்ள பகுதியில் ஏழை - எளிய மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வந்தார். இதனையடுத்து, அவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டு அவதிப்பட்டார். பரிசோதனையில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு பாத்திமா கனியை அவரது  உறவினர்கள் மீட்டு நாசர் சிகிச்சை பெற்று வரும் அதே தனியார் மருத்துவமனையில் கொண்டு சிகிச்சைக்காக சேர்ந்தனர்.


Tags : Avadi Nasser ,hospital , Avadi, Nasser's wife, Corona, private hospital, admission
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...