×

பிரதம மந்திரி- கிசான் திட்டத்தில் வங்கியின் மூலம் மீனவர்களுக்கு கடன்: மீன்வளத்துறை அறிவிப்பு

சென்னை: தமிழக மீன்வளத்துறை வெளியிட்ட அறிவிப்பு: பிரதம மந்திரி-கிசான் திட்டத்தின் கீழ், மீன் வியாபாரம் செய்யும் மீனவ மக்களுக்கு வங்கியின் மூலம் கடன் வழங்கப்படுகிறது. அதன்படி மீனவ மகளிருக்கு ரூ.33 ஆயிரம், சைக்கிள் மூலம் மீன் வியாபாரம் செய்பவர்களுக்கு ரூ.33 ஆயிரம், கருவாடு வியாபாரம் செய்பவர்களுக்கு ரூ.35 ஆயிரம், இரு சக்கர வாகனத்தில் குளிர்சாதன பெட்டியை வைத்து மீன் வியாபாரம் செய்பவர்களுக்கு ரூ.1.15 லட்சம் வழங்கப்படுகிறது.  

சென்னை மாவட்ட மீனவ மக்கள், இதற்கான விண்ணப்பங்களை ராயபுரத்தில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.  இந்த கடன் விண்ணப்பத்தை பெறுவதற்காக இடைத்தரகர்கள் யாரையும் அணுக வேண்டாம். இடைத்தரகர்கள் யாராவது அணுகினால், அவர்களைப் பற்றிய தகவலை 93848 24245, 93848 24340 என்ற அலைபேசி எண்களில் தெரிவிக்கலம்.



Tags : Fishermen ,Bank , Prime Minister, Kisan Project, Bank, Fishermen, Credit, Fisheries
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...