×

ஆரணியில் ரூ. 2.75 மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கட்டிடத்திற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்!!

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் 3 கோடியே 25 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கட்டடம் மற்றும் கோட்டாட்சியர் குடியிருப்புக் கட்டடத்திற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



Tags : Palanisamy ,office building ,Revenue Commissioner , Arani, Revenue Commissioner, Office, Chief Minister Palanisamy, Foundation
× RELATED ஷர்மிளா தற்கொலை விவகாரம்:...