சென்னை: 4 மாத மின் நுகர்வை இரண்டு மாத மின் நுகர்வாக பிரிக்காமல் கட்டணம் வசூலிப்பதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களிடம் மங்காத்தா சூதாட்டம் போல் மின்கட்டண வசூலில் ஈடுபடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது. ஏற்கனவே கொரோனா துயரத்தில் மூழ்கியிருக்கும் மக்களுக்கு மின்வாரிய நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது.