×

சென்னையில் நாளை முதல் ரயில்களில் முன்பதிவு டிக்கெட்களுக்கு பணம் பெறலாம்

சென்னை: ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்களை ரத்து செய்து பணத்தை திரும்ப பெற நாளை முதல் கவுண்டர்கள் திறக்கப்பட உள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல், சென்னை கடற்கரை, அரக்கோணம், காட்பாடி ,தாம்பரம் உள்ளிட்ட 19 இடங்களில் டிக்கெட் ரத்து செய்வதற்கான பணத்தை திரும்ப பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கவுண்டர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Chennai ,counters ,booking tickets , Counters ,canceling , open ,tomorrow
× RELATED பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் மின்சார ரயில் சேவை ரத்து