சென்னை: கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலுக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. திமுக வேட்பாளர் சுகுணா தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டது. திமுக, அதிமுக வேட்பாளர்கள் சமபலத்தை பெற்றதால் ஒன்றிய தலைவர் தேர்தலை மீண்டும் நடத்த தேத்தல் ஆணையம் உத்தரவிட்டது. மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து திமுக வேட்பாளர் சுகுணா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.