சென்னை: ஆந்திர சட்டக்கல்லூரியில் போலி சான்றிதழ் கொடு மோசடி நடைபெற்றுள்ளதாக தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், போலி சான்றிதழ் பற்றி சென்னை பார் கவுன்சிலில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், ஆயிரம் பேர் போலி சான்றிதழ் பெற்று வழக்கறிஞர்களாக பதிவு செய்துள்ளனர் என்றும், முறைகேடாக பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.