தென்காசி: உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என தென்காசி மாவட்ட துவக்க விழாவில் முதல்வர் உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் 33வது மாவட்டமாக தென்காசி இன்று உதயமானது. தென்காசி மாவட்டத்தை துவக்கை வைத்து பேசிய முதல்வர் பழனிசாமி, உள்ளாட்சி தேர்தலுக்கும் புதிய மாவட்டங்கள் துவக்கப்பட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.