×

சந்திரபாபு மீது போலீசில் புகார்

திருப்பதி: திருப்பதி லட்டை, மதுவோடு ஒப்பிட்டு பேசிய தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தாழ்த்தப்பட்டோர் பிரிவு மாநில செயலாளர்  ராஜேந்திரா நேற்று திருப்பதி போலீசில் புகார் அளித்தனர். பின்னர் அவர் கூறுகையில், ‘முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்கள் கூட்டத்தில் திருப்பதி கோயிலில் லட்டு பற்றி தவறான கருத்து தெரிவித்தார். ஜெகன்மோகன் தலைமையிலான அரசு மதுபான விலையை உயர்த்தி உள்ளதைப்போல திருப்பதி லட்டு விலையும் உயர்த்தி உள்ளது என்று பவித்திரமான திருப்பதி லட்டை மதுபானத்துடன் ஒப்பிட்டு பேசினார். இந்த பேச்சு இந்து மக்களின் மனதை பாதிக்கும் வகையில் உள்ளது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றார்.

Tags : Chandrababu , Chandrababu , police
× RELATED ஜெகன்மோகனுக்கு பாடம் புகட்ட வேண்டும்;...