சென்னை: சென்னையில் அடுத்த பேரூரில் 400 எம்.எல்.டி. கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு அரசாணை வெளியிட்டுள்ளனர். ரூ.6,087 கோடியே 40 லட்சம் மதிப்பில் புதிய திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்தின் நிதி உதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.