சென்னை : ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது என்று தமிழக அரசு கூறியுள்ளது. தமிழக அரசு அனுப்பிய அமைச்சரவை தீர்மானம் குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது என ஐகோர்ட்டில் தகவல் தெரிவித்துள்ளது. சிறையில் உள்ளவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி நளினி மனுத்தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.