சென்னை: அத்திவரதர் திருவிழாவுக்கு மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. காஞ்சிபுரத்தில் நடைபெறும் அத்திவரதர் திருவிழாவுக்கு மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்கக் கோரி ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். முறையான பாதுகாப்பு இல்லாததால் அத்திவரதர் திருவிழாவுக்கு வரும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.