சென்னை: சென்னை கடற்கரை - திருமால்பூர் இடையே ஜூன் 1ம் தேதி முதல் விரைவு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே ஜூன் 1ம் தேதி காலை 7.50 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில், சென்னை கடற்கரைக்கு காலை 9.15 மணிக்கு வந்தடையும். திருமால்பூர்- சென்னை கடற்கரை இடையே ஜூன் 1ம் தேதி முதல் காலை 7.05 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் செங்கல்பட்டுக்கு காலை 8.10 மணிக்கு வந்தடையும். அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு காலை 9.30 மணிக்கு வந்தடையும். மேலும், செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே ஜூன் 1ம் தேதி காலை 8.05 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில், சென்னை கடற்கரைக்கு காலை 9.47 மணிக்கு வந்தடையும். செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே காலை 8.25 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில், சென்னை கடற்கரைக்கு காலை 9.55 மணிக்கு வந்தடையும். செங்கல்பட்டில் இருந்து ஜூன் 1ம் தேதி காலை 8.50 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில், காலை 10.20 மணிக்கு சென்னை கடற்கரைக்கு வந்தடையும்.
திருமால்பூரில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் செங்கல்பட்டுக்கு காலை 9.05 மணிக்கு வந்தடையும். பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு காலை 10.28 மணிக்கு வந்தடையும். பின்னர், சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6.13 மணிக்கு புறப்பட்டு திருமால்பூருக்கு இரவு 8.40 மணிக்கு சென்றடையும்.இதுதவிர ரயில் எண் (16116) பாண்டிச்சேரி - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஜூன் 1ம் தேதி எழும்பூரில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்படும். ரயில் எண் (16115) சென்னை எழும்பூர் - பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ் எழும்பூரில் இருந்து மாலை 6.10 மணிக்கு புறப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மீண்டும் ரயில் இயக்கம்
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூலை 23ம் தேதி நடைமேடை தடுப்பு மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு விரைவு ரயில் சேவை நிறுத்தப்பட்டு சாதாரண ரயிலாக இயக்கப்பட்டு வந்தது.
மேலும், தண்டவாளத்துக்கும் நடைமேடைக்கும் இடையே உள்ள இடைவெளி சரி செய்யும் பணி நடந்தது. தற்போது அந்த பணிகள் நிறைவடைந்ததால் வரும் ஜூன் 1ம் தேதி முதல் மீண்டும் அந்த தடத்தில் விரைவு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.